ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஏற்கனவே ஆஜரான 7 அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை சுட்டிக்காட்டி சசிகலா தாரப்பில் குறுக்கு விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, குறைந்தபட்சம் 2 மருத்துவர்களை இன்று விசாரணை செய்ய அறிவுறுத்தினார். அதன்படி இன்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அரவிந்தன், சுப்பிரமணியன், சுப்பிரமணியம் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *