காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தமது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்றார். ஸ்கீம் என்றால் என்ன, திட்டம் என்றால் என்னவென்று மத்திய அரசு விளக்கம் கேட்பது, காலம் தாழ்த்தும் முயற்சி எனவும் அவர் குற்றம்சாட்டினார்.