தற்காலிகமாக முடங்கிய அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி அழைப்பு எண் 108 மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்பு எண் 108 உள்ளது. பி.எஸ்.என்.எல்., தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டதால், 108 அழைப்புக்கான சேவை பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதாக சேவை மையத் தலைமையகம் அறிவித்தது. எனவே மருத்துவ ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்ணுக்கு பதில், தற்காலிகமாக அழைப்பதற்காக மற்றொரு எண்ணையும் அறிவித்திருந்தது. இந்நிலையில், 108 அழைப்பு சேவை மீண்டும் சீராகிவிட்டதால், தற்காலிக எண்ணுக்கு அழைக்க வேண்டாம் என அதன் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.