வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோருக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்கோமில் உள்ள ராயல் சுவீடிஷ் அகாடமி மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லியம் நார்தாஸ், நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் பால் ரோமர் ஆகியோருக்கு வழங்கப்படும் என ராயல் சுவீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.
பருவநிலைப் பொருளாதாரம் குறித்த ஆராய்ச்சிக்காக வில்லியம் நார்தாசுக்கும், நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிக்காகப் பால் ரோமருக்கும் நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.