தமிழத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதியதாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி கண்ட 59 பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறினார்.