இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது கவலையளிப்பதாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் யார் என்பதில், ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே இடையே கடும் போட்டி நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்த அதிபர் சிறிசேனா, பொதுத்தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற, முதல் உலகப்போர் நிறைவுற்றதன் 100ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இலங்கை அரசு, அரசியலமைப்பு சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு பிரச்சனைகளை களைய வேண்டும் என்ற அவர், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது கவலையளிப்பதாகவும் கூறினார்.