சிங்கப்பூரில் அடுத்த ஆண்டே பொதுத்தேர்தல் நடைபெறலாம் – அந்நாட்டு பிரதமர்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டே பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக, அந்நாட்டு பிரதமர் Lee Hsien Loong கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் பிரதமர் Lee Hsien Loong ஆட்சி நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், அடுத்த பொதுத்தேர்தல் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவேண்டும். இந்நிலையில், தனது மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற Lee Hsien Loong, உலக வர்த்தக நெருக்கடிகளுக்கு இடையே, சிங்கப்பூர் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுத்தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கட்சியின் கடைசி மாநாடாக இது இருக்கும் என்ற அவர், அடுத்த ஆண்டே பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். சிங்கப்பூர்வாசிகள் வளர்ச்சி மற்றும் திறன்களை மேம்படுத்துவதில், அரசு தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *