8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது.
2017 – 2018ஆம் ஆண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 32.5 மில்லியன் டன்களாக இருந்தது. 2018 – 2019 ஆண்டிலும் இதே அளவு உற்பத்தியாகியுள்ளது. உள்நாட்டு தேவையை விடவும் கூடுதல் சர்க்கரை கையிருப்பு உள்ளதால் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது. 6 லட்சம் டன் மூல சர்க்கரையும், 2 லட்சம் டன் வெள்ளை சர்க்கரையும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. சீனாவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலும் கிடைத்துள்ளது. இந்தோனேசியாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி
2017-2018 – 32.5 மில்லியன் டன்
2018-2019 – 32 மில்லியன் டன்
சர்க்கரை ஏற்றுமதி ஒப்பந்தம்
8,00,000 டன் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம்
இலங்கை, ம.கிழக்கு நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம்
ஒப்புதல் அளித்தது – சீனா
பேச்சுவார்த்தையில் – இந்தோனேசியா
மூல சர்க்கரை – 6 லட்சம்
வெள்ளை சர்க்கரை – 2 லட்சம் டன்