எண்ணெய் உற்பத்தியை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உயர்ந்து கொண்டே வந்தது. தற்போது இந்த நிலை மாறி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 70 டாலராக இருந்தது.
இந்நிலையில், பெட்ரோல் உற்பத்தியாளர் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள உலகின் பிரதான எண்ணெய் நிறுவனங்களுடன் சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அபுதாபியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் எண்ணெய் உற்பத்தியை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக ஒரு நாளில் உற்பத்தியாகும் எண்ணெய் அளவில், 10 லட்சம் பேரல்களை குறைப்பது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.