பிரேசிலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 10 பேர் பலி

பிரேசிலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 10 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரம்  மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது மண் சரிவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அங்கு நிட்ரோய்  என்ற பகுதியில் அதிகாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த சில வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாயமான மேலும் 4 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மேலும், மலைப்பாங்கான அந்த பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஏராளமான வீடுகள் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *