அரசியலுக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை : அருண்ஜேட்லி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசியலுக்காக மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, பாஜக தேர்தல் அறிக்கையை அருண்ஜேட்லி வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நெறிமுறைக்காக எடுக்கப்பட்டதே அன்றி, அரசியலுக்காக எடுக்கப்படவில்லை என்றார். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், மத்திய மாநில அரசுகளுக்கும் கணிசமாக வருவாய் உயர்ந்துள்ளதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *