பத்திரிக்கையாளர் கஸோக்கியை கொலை செய்ய உத்தரவிட்டது, சவுதி பட்டத்து இளவரசர் தான் என்று அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. கருதுகிறது.
துருக்கியில் உள்ள சவுதி அரேபிய நாட்டுத் தூதரகத்தில் வைத்து அமெரிக்கப் பத்திரிக்கையாளரான ஜமால் கஸோக்கி கடந்த மாதம் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தியுள்ள அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, சவுதி பட்டத்து இளவரசரின் சகோதரர் காலித் பின் சல்மான், கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கஸோக்கியிடம் செல்போனில் பேசியதை கண்டுபிடித்துள்ளது.
இதன் அடிப்படையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தெரியாமல் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சிஐஏ கருதுகிறது. ஆனால் சி.ஐ.ஏ.வின் மதிப்பீடு முழுக்க முழுக்க தவறானது என்று சவுதி அரசு மறுத்துள்ளது.