சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக செலவழிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் 28 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்த தேர்தல் ஆணையம், நாளொன்றுக்கு ஒரே முறையில் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக செலவு செய்ய முடியும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
தற்போது, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்பட 5 மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக செலவு செய்ய வேண்டும் என தற்போது தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது 5 மாநிலத் தேர்தல் வேட்பாளர்களுக்கும் பொருந்தும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம், இந்த நடவடிக்கையால் சட்டவிரோதப் பணப்புழக்கம் தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.