அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை பணியில் இருந்து நீக்குமாறு, அதிபர் டிரம்புக்கு, அவரது மனைவி மெலானியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மிரா ரிக்கார்டெல் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது, மெலானியா டிரம்ப் – மிரா ரிக்கார்டெல் இடையே தகராறு ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளிக்காத நிலையில், மிரா ரிக்கார்டெல்லை பதவியில் இருந்து நீக்குமாறு, அதிபர் டிரம்பிடம் மெலானியா வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, டிரம்பின் அலுவலக விவகாரத்தில் மெலானியா தலையிடுவதற்கு, வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிபர் டிரம்ப் நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.