உலகளாவிய தாக்கத்தால், இந்தியாவில் வெளியேற முடிவு செய்யும் நிறுவனங்கள், தொடர்ந்து இயங்குவதற்கு முடிந்தவரை உதவிகளை செய்ய இருப்பதாக, டுவிட்டர் சி.இ.ஓ. தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியும், இணை நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்களிடையே கலந்துரையாடினார். டுவிட்டர் குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டபோது, அவர் தமது அனுபவத்தை விரிவாக பகிர்ந்து கொண்டதாக ஜாக் டோர்சி தெரிவித்தார்.
மிகச் சிறந்த பல நிறுவனங்கள் உலகளாவிய தாக்கத்தால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்ட ஜாக் டோர்சி, தம்மால் முடிந்தவரை அத்தகைய நிறுவனங்கள் தொடர்ந்து செயலாற்ற உதவி செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.