2700 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தினமும் அரசு மருந்துவமனைகளில 40 முதல் 50 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெறுவதாகத் தெரிவித்தார். டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும் பன்றிகாய்ச்சலுக்கு 14 பேரும் உயிரிழந்ததாக அவர் கூறினார்.