கொளத்தூரில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவை செய்ய விரும்புவதாக ஸ்டாலின் பேச்சு

கொளத்தூர் தொகுதியில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவை செய்ய விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கொளத்தூர் தொகுதியில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது கொளத்தூரைவிடவே மாட்டியா, கொளத்தூரில் என்னதான் இருக்கு என கருணாநிதி கேட்பார் என்று குறிப்பிட்ட அவர், அரசியல் பணிகளுக்கு இடையே எனக்கு நேரம் கிடைத்தால் கொளத்தூருக்குதான் வருவேன் என்றும் கொளத்தூர் தொகுதியில் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *