மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி:
ஒவ்வொரு ஆண்டும் மே 5ம் தேதி வணிகர்கள் தினமாக வணிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழக மக்களின் வாழ்வில் முக்கிய பங்காக விளங்குபவர்ள் வணிகர்கள், மே5 அன்று வணிகர் தினமாக கொண்டாடும் அனைத்து வணிகர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வணிகர்கள், தனது வணிகத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டு நலனிலும், தமிழக மக்களின் உரிமையிலும் பெரிதும் அக்கறை கொண்டவர்கள் நமது வணிகர்கள், காவிரி உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்காக ஆதரவாக கடையடைப்பு நடத்தியதும், ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்ற நிறுவனங்களின் குளிர்பானங்களை விற்பனை செய்வதை புறக்கணித்ததும் பாராட்டுக்குரியது. நாட்டின் நிலவும் பொருளாதார நெருக்கடியிலும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்குத்தடையின்றி விற்பனை செய்துவரும் வணிகர்களின் சேவை தொடரட்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.அன்புடன்எம் எச் ஜவாஹிருல்லாதலைவர்
2018-05-04