நீட் மாணவர்களுக்கு நாகை MLA நிதியுதவி! -மு.தமிமுன் அன்சாரி

வெளி மாநிலங்களுக்கு நாகை தொகுதியில் இருந்து நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு முழு செலவும் வழங்கப்படும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை MLA-வும்மான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிவித்தார்.

அவரது அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு இலவச ரயில் கட்டணத்தையும், ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் அறிவித்தது.

நாகை MLA தான் அறிவித்தப்படி தனக்கு வந்த அலைப்பேசி அழைப்புகளை ஏற்று தனது தொகுதியை சேர்ந்த நான்கு மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக தலா 5000 ரூபாய் வழங்கினார். தேர்வு முடிந்த பிறகு கூடுதல் செலவாகி இருந்தால் அதையும் பெற்று கொள்ளுமாறு கூறினார். MLA அவர்களின் நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.

தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தகவல் அறிந்து வெளி மாவட்டங்களிலிருந்து தொடர்பு கொண்ட மாணவ, மாணவிகளை தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.

MLA அவர்களின் சேவையை பாராட்டி உலக முழுக்க வாழும் தமிழர்கள் அலைபேசி வாயிலாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறிய வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *