தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஓமன் கரையை நோக்கி நகர்வதாக அவர் கூறினார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிக்கு 12ந் தேதி வரையும், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதிக்கு நாளை வரையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *