முனாப் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக, ஆனந்த் என்பவர் அளித்த புகாரின்பேரில், இருவரையும் அயனாவரம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து இன்று விசாரித்தனர். உதவி ஆய்வாளர் சுப்பிரமணி விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென முனாப் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தை குத்த முயன்றுள்ளார்.
இதை உதவி ஆய்வாளர் சுப்பிரமணி தடுக்க முயன்றபோது, அவரது கை கிழிந்து ரத்தம் கொட்டியது. காவல் நிலையத்திலேயே கத்தியால் தாக்கிய முனாப்பை கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். வெட்டுக்காயமுற்ற உதவி ஆய்வாளர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். காவல் நிலையத்துக்குள்ளேயே உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.