காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகராட்சி 33,34,35 வார்டுகளில் உள்ள என்.எஸ்.கே நகர், எம்.ஜி.ஆர் நகர், அண்ணாநகர், உள்ளிட்ட குடியிப்புகளில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என தெரிவித்து 100க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் செல்லும் ராஜேந்திர பிரசாத் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
2018-03-22