நீலகிரி மாவட்டம் உதகை அருகே, சிறுத்தை தாக்கி முதியவர் காயமடைந்தார். தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தர் என்பவர், ஆடுகளுக்கு புல் அறுக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள புதரில் மறைந்திருந்த சிறுத்தை, சுந்தரை தாக்கிவிட்டு சென்றுள்ளது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயமடைந்த அவருக்கு, தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது