டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுக்க தி.மு.க.வினரே தயாராக உள்ளனர் – தி.மு.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ

சட்டப்பேரவையில் பேசிய திருமயம் எம்.எல்.ஏ, ரகுபதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடை பார்களும் முறையாக ஏலம் விடப்பட்டிருந்தால் அரசுக்கு ஆண்டுக்கு தொள்ளாயிரம் கோடி ரூபாய் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் வந்திருக்கும் என்றார்.

ஆனால் தமிழக அரசு முறையாக ஏலம் விடுவதில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார். டாஸ்மாக் கடைகளை ஏலம் விட தமிழக அரசு முன்வந்தால் ஏலம் எடுக்க திமுகவினரே தயாராக உள்ளதாகவும் எம்.எல்.ஏ ரகுபதி கூறினார். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வரும் தி.மு.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரகுபதி டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க தயார் என்று அறிவித்துள்ளதன் மூலம் உண்மை வெளிப்பட்டிருப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *