ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேகியாவில் 160 கோடி டாலர்கள் மதிப்பிலான தொழிற்சாலையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர், ஸ்லோவேகியாவில் நிறுவும் தொழிற்சாலையில், வரும் 2020ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளது.
ஏற்கெனவே இந்தியா, பிரிட்டன், பிரேசில், சீனா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் தயாரிப்பு ஆலைகள் இருந்தாலும், ஸ்லோவேகியாவில் தொடங்கப்படும் ஆலை, ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆளெடுக்கும் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறியுள்ள ஜாகுவார் நிறுவனம், விரைவில் ஆலை இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.