பாலியல் புகாருக்கு ஆளான 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்

கூகுள் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட 48 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவன தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். ஆன்ட்ராய்டின் தந்தை என அழைக்கப்படும் ஆண்டி ரூபின்  தமது பெண் உதவியாளரிடம் தவறான உறவில் இருந்த புகார் உறுதியானதால், இந்திய மதிப்பில் சுமார் 568 கோடி ரூபாய் பணப்பலன்களுடன் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுந்தர்பிச்சை கடந்த 2 ஆண்டுகளில் 13 மூத்த அதிகாரிகள் உள்பட 48 பேர் பாலியல் புகார்களால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அவர்களில் யாருக்மே வேலையிலிருந்து செல்லும் போது எந்த பணப்பலன்களும் வழங்கப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணியிடப் பாதுகாப்பே முக்கியம் எனவும், பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள்  மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *