கனடாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
நியூ பர்ன்ஸ்விக் என்ற இடத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகமும், அதிக அளவு எண்ணெய் இருந்ததாலும் தீயின் வேகம் கட்டுக்கடங்காமல் போனது. இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களால் அதனருகில் கூட செல்ல இயலவில்லை. நூற்றுக்கும் அதிகமான பீப்பாய்களில் எண்ணெய் இருப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.