கச்சா எண்ணெய் விலை பேரல் 82 டாலரை நெருங்கியது

பத்திரிகையார் மாயமான விவகாரத்தில் சவுதியில் பதற்றமான சூழல் உள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒன்றரை டாலர் உயர்ந்து 82 டாலரை நெருங்கியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த 2 ஆம் தேதி தேதி துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய தூதரத்திற்கு சென்ற பின் திடீரென மாயமானார். சவுதி அரேபிய அரசை அவர் கடுமையாக விமர்சித்து வந்தாக கூறப்படுகிறது. கசோக்கி கொல்லப்பட்டிருந்தால் கடுமையான  தண்டனை வழங்கப்படும் என்று சவுதி அரேபியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆனால் பதிலடி கொடுக்க தயாராகவே இருப்பதாக சவுதி அரேபியாவும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், சவுதி அரேபியா கச்சா எண்ணெயை ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் நடப்பு ஆண்டில் பேரல் 82 டாலர் என்ற விலையில் கச்சா எண்ணெய் விற்பனையாகும் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *