இரு நாடுகள் இடையே சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க கொரிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன

இரு நாடுகள் இடையே சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க கொரிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

அணு சார் திட்டங்களை முற்றிலும் கைவிடுவதாக அறிவித்ததை அடுத்து வடகொரியாவுடனான அமெரிக்கா, தென்கொரியா நாடுகளின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரிய நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகள் குழு, எல்லையில் உள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று சந்தித்துக் கொண்டன.

அதில், இரு நாடுகள் இடையேயான உறவை, புதிய மற்றும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும் பொருட்டு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. கொரியப் போருக்குப் பின் துண்டிக்கப்பட்ட போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான நிகழ்ச்சியை நவம்பர் இறுதியில் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *