உலக தண்ணீர் தினம் | World Water Day 2018

உலக தண்ணீர் தினம் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களிடையே தண்ணீரின் முக்கியத்துவத்தை குறித்து விழிப்புணர்வு…
இன்று உலகம் முழுவதும்  உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக உதகை படகு இல்லத்தில் தனியார் பள்ளி மற்றும் தனியார் தொண்டு அமைப்பினர் இணைந்து  உடோபியா எனும் பெயரில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.நிகழ்ச்சியை முன்னாள் இந்திய வெளியுறவு தூதுவர் சி.வி.ரங்கநாதன் துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மேலும், நீலகிரி உணவு மற்றும் தாங்கும் விடுதி சங்கத்தினர் தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *