மாலத்தீவில் அமலில் இருந்த அவசர நிலை, 45 நாள்களுக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அந்நாட்டில் அரசுக்கெதிராக ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க, அதிபர் அதுல்லா யாமீன் கடந்த மாதம் 5-ஆம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் அதிபர் மாமூன் அப்தல் கயூம் (Maumoon Abdul Gayoom) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். முதலில் 15 நாள்கள் என அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை, மேலும் 30 நாள்களுக்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 45 நாள்களாக மாலத்தீவில் அமலில் இருந்த அவசர நிலை, இன்று முதல் விலக்கிக் கொள்ளப் படுவதாக அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.