இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, சுதந்திர கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார்.
இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனா, வருகிற ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சுதந்திர கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் ராஜபக்சே இணைந்துள்ளார். அவருடன் சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த 50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த கட்சியில் இணைந்துள்ளனர். இந்நிகழ்வு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.