குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய அரசுப் பேருந்து, நிலைதடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

2 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து கம்பம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ராம்ஜி நகர் மில் காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது.

இருசக்கர வாகனம் மீது மோதிய பேருந்து, நிலைதடுமாறி, அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் புகுந்து நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த எட்டரை என்ற கிராமத்தைச் சேர்ந்த மதுக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், அனைவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *