ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புதிதாக 5 கோலா கரடிகள் தருவிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இருந்து இங்கிலாந்தில் உள்ள லாங்லீட் நகரில் உள்ள கிளிலேண்ட் வனஉயிரின பூங்காவுக்கு இந்தக் கரடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 16 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணத்தை சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் கோலா கரடிகள் மேற்கொண்டன. வெகுதூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டாலும் அந்தக் கரடிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்