ஆப்கானிஸ்தானில் கடந்த 9 மாதங்களில் மட்டும் தீவிரவாத தாக்குதலுக்கு 2,800 அப்பாவி பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 9 மாதங்களில் சுமார் 2 ஆயிரத்து 800 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி இருப்பதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தாலிபன் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதல் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்புகளில் சிக்கி, நடப்பாண்டில் மட்டும் 5 ஆயிரத்து 252 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறியுள்ள ஐ.நா. குழு, அரசுக்கு எதிரான குழுக்கள், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *