அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மிரட்டல்களால் இந்தியா- ரஷ்யா நட்புறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
அதிபர் விளாதிமீர் புதின் கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் இந்தியா வந்த போது இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஏவுகணை ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து ரஷ்யாவின் தூதரான நிக்கோலய் குடாசேவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுடன் ரஷ்யா மேலும் பல ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கசால்நிக்கோவ் துப்பாக்கிகள் வாங்குவது தொடர்பான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தெரிவித்தார்