அமெரிக்காவில் அதிக அளவில் அணு ஆயுதங்குகளை உற்பத்தி செய்வோம் – டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் அதிக அளவில் அணு ஆயுதங்குகளை உற்பத்தி செய்யப்போவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்கா – ரஷ்யா இடையே நிலவி வந்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளிடையே அணு ஆயுத உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அப்போதைய அதிபர்கள் ரீகனும், மிக்கேல் கோர்பசேவும் இதில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்ததற்கு, ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் அதிக அளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே ரஷ்யா ஒப்பந்தத்தை மதித்துப் பின்பற்றவில்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *