சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியான விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வலியுறுத்தி இருக்கிறார்.
டி.ஜெயக்குமார் என்பவருக்கு மகன் பிறந்துள்ளதாக குழந்தை பிறப்பு சான்றிதழ் ஒன்றும் ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல், பாதிக்கப்பட்டவர்தான் அது உண்மை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார். இவ்விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜெயக்குமார் சம்பந்தமான வீடியோ, ஆடியோ தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்ட வெற்றிவேல், அதை தாம் தற்போது வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்தார். தம் மீது தவறில்லை என்கிற போது, டி.என்.ஏ சோதனை மூலம் குற்றமற்றவர் என ஜெயக்குமார் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.