மும்பை, கொல்கத்தா, கவுஹாத்தி, உத்தர்கண்ட், சிக்கிம் ஆகிய 5 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளின் நியமனத்திற்கு பெயர்களை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு, கடந்த 9ம் தேதி ஆலோசனை நடத்தியது. இதையடுத்து 5 நீதிபதிகளின் பெயர்கள் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின், 5 தலைமை நீதிபதிகளும் பதவியேற்பார்கள்.