இங்கிலாந்தில் வீசிய சூறாவளியில் சிக்கி விமானங்கள் அலைக்கழிக்கப்பட்டன.
வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் நேற்று கடும் சூறாவளி வீசியது. மணிக்கு 122 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கனமழையும் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்க எத்தனித்த விமானங்கள் கிராஸ் லேண்டிங் எனப்படும் பக்கவாட்டில் இறங்க முயன்றன. ஆனால் காற்றின் வேகத்தில் மீண்டும் மேலே தூக்கப்பட்டதால் வேறு விமானநிலையங்களில் தரையிறக்கப்பட்டன.