புதிய செல்போன் இணைப்பு வழங்க ஆதாரை பயன்படுத்தக் கூடாது என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், செல்போன் இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் அல்ல என்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தொலைத்தொடர்பு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிதாக சிம்கார்டு வழங்குவதற்கோ, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை பயோமெட்ரிக் முறையில் சரிபார்ப்பதற்கோ ஆதாரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள், தாங்களாக ஆதார் அட்டை நகலை அளித்தால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.