தேர்தலில் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை சிதறடித்துவிட்டார் பிரதமர் மோடி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியைப் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுக்கால ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை மோடி வீணாக்கி விட்டதாக சாடினார். மதக்கலவரங்கள், கும்பலாக தனி நபரை அடித்துக் கொல்லுதல், பசு காவலர்கள் பெயரால் வன்முறைகள் போன்றவற்றில் மோடி மௌனமாக இருந்ததாகவும் மன்மோகன்சிங் விமர்சித்துள்ளார்.
பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை எட்டியிருப்பதற்கு மோடி அரசின் கடுமையான வரி விதிப்புதான் காரணம் என்றும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.