பாசன தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மழையின் தீவிரம் குறைந்ததால் டெல்டா மாவட்டங்களின் பாசன பகுதிகளுக்கு நீர் தேவை அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 13,000 கன அடியில் இருந்து, 17,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 700 கன அடியில் இருந்து 850 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படிமேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.88 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 3,926 கன அடியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *