பாலியல் தொல்லை விவகாரங்களில் புகார் தெரிவிக்க உள்ள கால நிர்ணயத்தை நீக்க சட்ட அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
பாலியல் தொல்லைகள் அளிக்கும் சிறார்களுக்கு மூன்ற ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 468 வழிவகை செய்கிறது. ஆனால், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர் மூன்று ஆண்டுகளுக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என கால நிர்ணயம் உள்ளது.
இந்த கால நிர்ணயத்தை முற்றாக தளர்த்த கோரி, சட்ட அமைச்சகத்திற்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். அதில், பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், பத்து பதினைந்து ஆண்டுகள் ஆனாலும், புகார்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாலியல் தொல்லை விவகாரங்களில் புகார் தெரிவிக்க உள்ள கால நிர்ணயத்தை நீக்க சட்ட அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.