காவிரி, ரபேல் விவகாரங்களால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

காவிரி, ரபேல் போர் விமானம் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் இன்று காலை கேள்வி நேரம் தொடங்கியதும், காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி அதிமுக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே, ரபேல் விவகாரத்தில், நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி சிவசேனா கட்சியும் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சனைகளால், மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *