வெற்றிகரமான தோல்வி என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, அவரிடமே விளக்கம் கேட்குமாறு, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு, நிமோனியா தடுப்பூசி வழங்கும் திட்டம் சென்னை வியாசர்பாடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், பாஜகவின் 5 மாநிலத் தேர்தல் தோல்வி குறித்த தமிழிசையின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.