கறுப்பு பணம் பதுக்குவோரை கண்டறிய இந்திய புதிய ஏற்பாடு

கறுப்பு பணத்தை பதுக்குவோர் குறித்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் லீச்டென்ஸ் டெயின் நாடும் கையெழுத்திட்டுள்ளன.

ஐரோப்பிய கண்டத்தில் ஆஸ்ட்ரியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ளதும், 37,666 பேர் மட்டுமே வசிப்பதுமான குட்டி நாட்டுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கங்களில் ஒன்றாக கருதப்படும் லீச்டென்ஸ் டெயின் நாட்டின் தலைநகரான வாண்டசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் அந்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்பு பணத்தை பதுக்கினால் இந்திய அரசுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வழி வகை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *