இராஜஸ்தானில் 120பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரண் சராப் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிகா வைரஸ் குறித்து சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இராஜஸ்தானில் 120பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 105பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஜிகா வைரஸ் காய்ச்சல் முன்கூட்டியே தடுக்கக் கூடியது என்றும், நோய் தாக்கியவர்கள் நல்ல ஓய்வெடுப்பதுடன் போதுமான அளவு தண்ணீர் குடித்து மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. இலேசான காய்ச்சல், தசை மூட்டுவலி, தலைவலி ஆகியவை இருப்பது இதற்கான அறிகுறிகளாகும்.