இனித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு, சுஷ்மாவின் முடிவுக்கு கணவர் வரவேற்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுஷ்மா சுவராஜ் முடிவெடுத்துள்ளதற்கு அவர் கணவர் சுவராஜ் கவுசல் நன்றி தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலம் கருதி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த முடிவுக்கு அவர் கணவர் சுவராஜ் கவுசல் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஓட்டப்பந்தய வீராங்கனை மில்க்கா சிங் கூட ஒரு கட்டத்தில் ஓட்டத்தை நிறுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1977 இல் இருந்து 41ஆண்டுகளாக 11தேர்தல்களில் சுஷ்மா போட்டியிட்டதையும், 47ஆண்டுகளாக அவருக்குப் பக்கப்பலமாகத் தான் இருந்து வருவதையும் சுவராஜ் கவுசல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *