கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியீடு

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கையில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிதியை செல்விடுவதற்கான திட்ட வரைவு கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, சிவகங்கை, நாகை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டம் ஆட்சியர்களுக்கும் தொடர்புடைய துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், கால்நடைகள், மற்றும் உடைமைகள் இழப்புக்கு 205 கோடியே 87 லட்சம் ரூபாயும், வீடுகள் சேதத்துக்கு 100 கோடி ரூபாயும், நாசமடைந்த பயிர்களுக்கு 350 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறைக்கு 25 கோடி ரூபாயும், நகர பஞ்சாயத்துக்களுக்கு 5 கோடி ரூபாயும், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 25 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு 10 கோடி ரூபாயும், குடிநீர் வாரியத்துக்கு 5 கோடி ரூபாயும் நகராட்சி நிர்வாகத்துக்கு 5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு 27 கோடியே 50 லட்சம் ரூபாயும், மீன்வளத்துறைக்கு 41 கோடியே 63 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், கால்நடைகள், மற்றும் உடைமைகள் இழப்பு – ரூ. 205.87 கோடி

வீடுகள் சேதம் – ரூ. 100 கோடி

நாசமடைந்த பயிர்கள் – ரூ. 350 கோடி

நெடுஞ்சாலைத்துறை – ரூ. 25 கோடி

நகர பஞ்சாயத்துக்கள் – ரூ. 5 கோடி

கிராமப் பஞ்சாயத்துகள் – ரூ. 25 கோடி

பொதுப்பணித்துறை – ரூ. 10 கோடி

குடிநீர் வாரியம் – ரூ. 5 கோடி

நகராட்சி நிர்வாகம் – ரூ. 5 கோடி

பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் – ரூ. 27.5 கோடி

மீன்வளத்துறை – ரூ. 41.63 கோடி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் – ரூ. 200 கோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *